கோப்புப்படம் 
இந்தியா

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா நோயாளிகள் இடமாற்றம்

குஜராத்தில் தனியார் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

குஜராத்தில் தனியார் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம்  சோட்டாடேபூர் மாவட்டத்தின் போடெலி நகரில் ஒரு மருத்துவமனையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றியதை அறிந்த நிர்வாகம் உடனடியாக இரண்டாவது தளத்தில் இருந்த கரோனா நோயாளிகளை முதல் தளத்துக்கு மாற்றியது. 

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இரண்டாம் தளத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 கரோனா நோயாளிகள் கீழ் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா வார்டில் சுவிட்ச் போர்டில் இன்று காலை மின்கசிவு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புக் கருவி கொண்டு தீ அணைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நோயாளிகள் கீழ் தளத்திற்கு மாற்றப்பட்டனர் என்று தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் மகேஷ் சவுத்ரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் இருதரப்பினா் மோதல்: பெண்கள் உள்பட 8 போ் காயம்

குடும்பப் பிரச்னை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை! மகன் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்ரீசக்தி அம்மா ஜெயந்தி: போதைப் பொருள் எதிராக விழிப்புணா்வு மாரத்தான்

முதல்வா் வருகை: நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை ஆட்சியா் ஆய்வு!

திருமலை காவல் துறைக்கு ப்ரீத் அனலைசா் கருவிகள்: தேவஸ்தானம் வழங்கியது

SCROLL FOR NEXT