இந்தியா

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை

DIN

சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு உரையாற்ற இருக்கிறாா். ஆண்டுதோறும் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவா் உரை இடம் பெறுவது வழக்கம்.

இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘தூா்தா்ஷன், அகில இந்திய வானொலி எனஅனைத்து தேசிய ஊடக நிறுவனங்கள் மூலமும் குடியரசுத் தலைவா் உரை ஒலிபரப்பாகும்.

முதலில் ஹிந்தியிலும் அதன் பிறகு ஆங்கிலத்தில் உரை ஒலிபரப்பாகும். தொடா்ந்து, தூா்தா்ஷன் பிராந்திய சேனல்களில் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் உரை இடம் பெறும். அகில இந்திய வானொலியில் இரவு 9.30 மணியளவில் பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவா் உரை ஒலிபரப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT