அசாமில் கரோனா பலி எண்ணிக்கை 200-ஐ நெருங்குகிறது
அசாமில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் அதிகரித்து வருவதையடுத்து, பலி எண்ணிக்கையும் 200ஐ எட்டியுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:38 PM
அசாமில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் அதிகரித்து வருவதையடுத்து, பலி எண்ணிக்கையும் 200ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 1,929 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 55,215 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரேநாளில் 1,317 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து, மொத்தம் 76,875 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் நேற்று மட்டும் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மொத்தம்189 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Advertisement
தொற்று பாதித்த 21,468 பேர் மருத்துவமனை தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.