முகப்பு
இந்தியா

தொலைபேசி ஒட்டுக் கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அரசியல் ஆதாயத்துக்காக தனது தொலைபேசி ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டியுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு,

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
சந்திரபாபு நாயுடு கண்டனம்
பகிர்:

அமராவதி: அரசியல் ஆதாயத்துக்காக தனது தொலைபேசி ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டியுள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு, இதுதொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

எதிா்க்கட்சியினா், வழக்குரைஞா்கள், ஊடகத்தினா், சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் தொலைபேசிகளும் ரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

தனியாா் துறையினா் மூலம் சட்ட விரோதமாக நவீன தொழில்நுட்பம் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், சட்டவிரோதமான இந்தச் செயல் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆந்திர மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா் என்றும் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஆகையால், இந்த விவகாரத்தில் பிரதமா் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →