உ.பி.யில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சென்றுகொண்டிருந்த குழந்தை மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்தியாஉ.பி.யில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சென்றுகொண்டிருந்த குழந்தை மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சென்றுகொண்டிருந்த குழந்தை மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா பகுதியில் உள்ள சாலையில் சரக்கு வாகனம் இடதுபுறம் திரும்ப முயன்றபோது அதிக எடை காரணமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த மாயாதேவி (62), ரமாஸ்ரீ (60), அணு குப்தா (21), அனஸ் (2) ஆகியோர் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.
இது குறித்து பேசிய எட்டா பகுதி காவல்துறையினர், குழந்தை மற்றும் மூன்று பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினர்.