ராஜஸ்தானில் இன்றைய கரோனா பாதிப்பு 695
ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 695 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 695 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
இன்று புதிதாகப் பதிவாகியுள்ள பாதிப்பையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 67,314 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 237 பேர் குணமடைந்த நிலையில், 189 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை, தொற்று காரணமாக 926 பேர் பலியாகியுள்ளனர்.
மொத்தம் இதுவரை 51,427 பேர் குணமடைந்துள்ளனர். அதில், 50,749 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு 29 லட்சத்தைத் தாண்டியது, கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது.