கர்நாடகத்தின் கோடேரியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் பி.எஸ் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இழப்பீடு வழங்குவது தொடர்பான உத்தரவு நகல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் எம்.எல்.ஏ பி எம் சுகுமார் ஷெட்டி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மஞ்சுநாத் கார்வி, லக்ஷ்மன் கார்வி, சேகர் கார்வி மற்றும் நாகராஜ் கார்வி ஆகிய நால்வரும் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.