தெலங்கானாவில் புதிதாக 1,842 பேருக்குப் பாதிப்பு: 6 பேர் பலி
தெலங்கானாவில் புதிதாக 1,842 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,06,091 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் புதிதாக 1,842 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,06,091 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 761 ஆக உள்ளது.
ஒரே நாளில் 1,825 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் 82,411 பேர் இதுவரை குணமடைந்தனர்.
Advertisement
கடந்த 2 நாள்களில் 36,282 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 895 பேரின் மாதிரிகள் முடிவுக்காக காத்திருக்கின்றன.
கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியில் (373), நிஜாமாபாத் (158), கரீம்நகர் (134), சூர்யாபேட்டை (113), ரங்கா ரெட்டி (109) ஆகிய மாநிலங்களிலும், 33 மாவட்டங்களில் தலா 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.