தெலங்கானாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு தினசரி 2 ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு தினசரி 2 ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,754 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,20,166 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பேர் பலியாகியுள்ளதை அடுத்து இதுவரை 808 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 0,67 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 1.81 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும், இரண்டு நாள்களில் 1,675 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, நோயிலிருந்து மீண்டு மொத்த எண்ணிக்கை 89,350 ஆக உள்ளது. தொற்று பாதித்த 30,008 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தெலங்கானா மாநிலத்தில் 12,66,643 கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.