நீட் - ஜேஇஇ குறித்து பேசாமல் பொம்மைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தஞ்சாவூர் பொம்மைகள் குறித்து பேசினார். பொம்மைகள் தயாரிப்பை புதிய கல்விக் கொள்கையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ''நீட் - ஜேஇஇ தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் மோடியோ பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்'' என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.