இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,852 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,852 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,852 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,92,541 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11,158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 184 பேர் பலியாகியுள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 5,73,559 பேர் குணமடைந்துள்ளனர், 24,583 பேர் பலியாகியுள்ளனர். 1,94,056 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,45,805 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,17,268 பேர் குணமடைந்துள்ளனர். 7,655 பேர் பலியாகியுள்ளனர். 20,554 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 15 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவிப் பகுதியில் மட்டும் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,775 ஆக உயர்ந்துள்ளது. எனினும், 2,416 பேர் குணமடைந்துவிட்டதால், 94 பேர் மட்டுமே இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT