இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் படுகாயம்

DIN

சத்தீஸ்கரில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வாகனம் வெடித்ததில் பொதுமக்களில் இருவர் படுகாயமடைந்தனர். 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் ராஜபெண்டா கிராமத்தின் அருகே நக்சல்கள், வாகனத்தில் வெடிபொருள்கள் வைத்து வெடிக்கச் செய்தனர். இதில் இருவர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலை 9 மணியளவில் பசகுடா மற்றும் டாரெம் கிராமங்களுக்கு இடையே உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் முகமது இக்பால் அன்சாரி மற்றும் மோட்டார் மெக்கானிக் பால்ராம் பிரதான் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

முதற்கட்ட தகவல்களின்படி, வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டாரெம் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனது டிரக்கை சரிசெய்ய அன்சாரி, பிரதானுடன் அங்கு சென்றுள்ளார். வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரத்தில் தீவிரவாதிகள் வந்து வாகனத்தில் வெடிபொருள் வைத்துச் சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT