இந்தியா

பிஎம்-கேர்ஸ் நிதி எங்கே?: மம்தா

பிஎம்-கேர்ஸ் நிதி எங்கே போனது? அதை ஏன் தணிக்கை செய்யவில்லை? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

DIN


பிஎம்-கேர்ஸ் நிதி எங்கே போனது? அதை ஏன் தணிக்கை செய்யவில்லை? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:

"மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசின் விருப்பத்துக்கு இணங்க என்னுடைய அரசு செயல்படாது. பிஎம்-கேர்ஸ் நிதி எங்கே போனது? இந்த நிதியின் எதிர்காலம் குறித்து யாருக்காவது தெரியுமா? லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணம் எங்கே? அதை ஏன் தணிக்கை செய்யவில்லை?

மத்திய அரசு எங்களுக்கு பாடம் எடுக்கிறது. கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள்?

எங்களை அச்சுறுத்துவதற்காக மத்திய அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. நாங்கள் அதுகுறித்து அஞ்சப்போவதில்லை. பாஜக அரசியல் கட்சியல்ல. அதுவொரு பொய்க் குப்பை."

மேற்கு வங்கத்தில் 294 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து..! டி20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!

SCROLL FOR NEXT