முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,600 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,600 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 2 டிசம்பர், 2020 at 9:32 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,600 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

புதிதாக 5,600 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,32,176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,027 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,95,208 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் 111 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 47,357 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் இன்னும் 88,537 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,700 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,371 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, 18 பேர் மட்டும் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.