முகப்பு
இந்தியா

விவசாயிகள் போராட்டம்: அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
விவசாயிகள் போராட்டம்: அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை (கோப்புப்படம்)
பகிர்:

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளும் தில்லியின் டிக்ரி மற்றும் சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் தங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தில்லியில் உள்ள அமித் ஷா இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், விவசாயிகளின் போராட்டம் அதிகரித்து வருவது குறித்தும், விவசாய சட்டங்கள் மீதான விவசாயிகளின் கோரிக்கை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கையாளும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →