முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் லாரி சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
4-year-old dies after coming under truck's wheels in Jharkhand
பகிர்:


ஜார்க்கண்டின் கோடெர்மா மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

கோடெர்மா காவல் நிலைய பகுதியில் மலைப்பாதை வழியாகத் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  

இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிர்த்திசையில் வந்த லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்சி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.