முகப்பு
இந்தியா

புரெவி புயல்: திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்

புரெவி புயல் எதிரொலியாக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
புரெவி புயல்: திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல் (கோப்புப்படம்)
பகிர்:

புரெவி புயல் எதிரொலியாக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலான விமானங்கள் இயக்கப்படாது என்றும், இன்றைய பயண நேரத்தை மாற்றியமைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வியாழக்கிழமை மாலை பாம்பன் அருகே நெருங்கி வரும்போது வலுவிழந்தது. 

இது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே வியாழக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்க தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலையில் முழுமையாகக் கடந்தது.

புயல் வலுவிழந்தாலும் தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 6 மணிவரையில் விமானங்கள் இயக்கப்படாது என்றும், இன்றைய பயணத்தை ரத்து செய்து பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மாற்று தேதியில் பயண தேதியை அமைத்துக்கொள்ள விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அவசர கால பயணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →