முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,026 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,026 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 10:19 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,026 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,59,367 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6,365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 53 பேர் பலியாகியுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 17,37,080 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 47,827 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இன்னும் 73,374 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 93.42 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.