மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை அவரது இல்லத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் இல்லத்தில் ஹரியாணா மாநில முதல்வர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.