முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து ஆலோசனை: விவசாயத் தலைவர்

​அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

இந்தியா

அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து ஆலோசனை: விவசாயத் தலைவர்

​அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 14-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 9-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு அமித் ஷாவுடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராகேஷ் டிக்கைட் முன்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து ராகேஷிடம் சற்று முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அமித் ஷாவுடனான சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →