முகப்பு
இந்தியா

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக அறிவித்துள்ள விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு
பகிர்:

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 14 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும், திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் சட்டத்திருத்தம் குறித்த பரிந்துரைகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 12ஆம் தேதி தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்க உள்ளதாகவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் தில்லி எல்லையில் காவல்துறையினர் அதிக அளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →