பஞ்சாப்: 12 மாவட்டங்களில் 24% கரோனா பாதிப்பு
பஞ்சாபில் 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24.19 சதவிகிதத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24.19 சதவிகிதத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் மக்கள் தொகை அடிப்படையில் 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 4,678 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 4.03 சதவிகிதம் அறிகுறிகளுடனும், 95.9 சதவிகிதத்தினர் அறிகுறிகளற்றவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.
நகர்புறங்களில் 30.5 சதவிகிதத்தினரும், கிராமப்புறப் பகுதிகளில் 21 சதவிகிதத்தினரும் தொற்று உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
லுதியானா பகுதியில் 54.6 சதவிகிதத்தினர் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் அதிக அளவாக பெரோஸ்பூர், ஜலந்தர், மொஹாலி ஆகிய நகர்புறப் பகுதிகளில் 71.7 சதவிகிதம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.