வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டம்: ஹரியாணா விவசாயிகள் குழு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹரியாணாவைச் சேர்ந்த 29 விவசாயிகள் அடங்கிய குழு இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டம்: ஹரியாணா விவசாயிகள் குழு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹரியாணாவைச் சேர்ந்த 29 விவசாயிகள் அடங்கிய குழு இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹரியாணாவைச் சேர்ந்த 29 விவசாயிகள் அடங்கிய குழு இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரதிய விவசாய சங்கத்தின் ஹரியாணா மாநிலத் தலைவர் குனி பிரகாஷ் தலைமையில் 29 விவசாயிகள் அடங்கிய குழு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை இன்று சந்தித்தனர். அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சரிடம் ஆதரவுக் கடிதத்தை சமர்பித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு குனி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "சட்டங்களை திரும்பப் பெற்றால் நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உண்டு. அவர்களுக்கு போராட உரிமை இருக்கும்போது, எங்களுக்கும் போராட உரிமை இருக்கிறது. நாங்கள் 3 சட்டங்களுக்கும் ஆதரவானவர்கள்.
ஆனால், இந்தப் போராட்டம் இடதுசாரிகளால் வழிநடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் அரசியல் சாயம் பூசிக்கொண்டுள்ளது. இந்த 3 சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்" என்றார் அவர்.
ஹரியாணாவிலிருந்து அமைச்சர் தோமரைச் சந்திக்கும் இரண்டாவது விவசாயிகள் குழு இது. முன்னதாக டிசம்பர் 7-ம் தேதி ஒரு விவசாயிகள் குழுவினர் தோமரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.