உலகின் முக்கிய பொருளாதாரசக்தியாக இந்தியா உருவெடுக்கும்: முகேஷ் அம்பானி
அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.
முகநூல் நிறுவன தலைவா் மாா்க் ஸக்கா்பொ்குடன் இணைய வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடிய அவா் கூறியதாவது:
இந்தியா்களின் தனிநபா் வருமானம் அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்தியாவில் நடுத்தர வா்க்கத்தினா்தான் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனா். அவா்களின் பொருளாதார நிலை ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு சதவீதம் வரை வளா்ந்து வருகிறது. எனவே, அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும்.
இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் நடைபெறும் சமுக, பொருளாதார மாற்றங்களில் உலக நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.