இந்தியா

நாட்டில் புதிதாக 22,065 பேருக்குத் தொற்று; 354 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,065 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 354 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,065 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 99,06,165 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 354 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,709ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 34,477 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 94,22,636 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 3,39,820 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோன்று நாட்டில் டிசம்பா் 13-ஆம் தேதி வரை 15,55,60,655 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 9,93,665 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT