கர்நாடகத்தில் அதிகரிக்கும் கரோனா
கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,04,665-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
புதிதாக 1,403 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,77,199-ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,971-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.