புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து வாக்களித்தது குறித்து...
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை (ஏப். 9) காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 37.06 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
Advertisement
துணநிலை ஆளுநர் வாக்குப்பதிவு
புதுச்சேரி துணநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவையை அடுத்துள்ள சுகாகாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது தாயார் லீனா, அவரது மனைவி பீனாவுடன் வந்து வாக்களித்தார். அவரது தாயார் லீனா சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது முதன்மையான கடமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.