புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து வாக்களித்தது குறித்து...
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை (ஏப். 9) காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
அதன்படி, காலை 11 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 37.06 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
Advertisement
Advertisement
துணநிலை ஆளுநர் வாக்குப்பதிவு
புதுச்சேரி துணநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவையை அடுத்துள்ள சுகாகாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது தாயார் லீனா, அவரது மனைவி பீனாவுடன் வந்து வாக்களித்தார். அவரது தாயார் லீனா சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஜனநாயகத்தை காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது முதன்மையான கடமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
Puducherry Lieutenant Governor Kailashnathan casts his vote, accompanied by his wife
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.