மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,304 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,304 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,304 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மாநிலத்தில் புதிதாக 4,304 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 18,80,893 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 95 பேர் நோய்த் தொற்றால் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,434 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,763 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,439 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, வெறும் 12 பேர் மட்டுமே இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.