தில்லியில் தொழிற்சாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி
தில்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தில்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தில்லி விஷ்ணு கார்டன் பகுதியில் மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் தொழிற்சாலையின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணி ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கினர்.
உடனே இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுக்குழுவினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 4 பேர் இறந்தனர். மற்ற இருவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாரம் காரணமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.