வேளாண் சட்டங்கள் குறித்து தோமர் தமிழில் கடிதம்: பிரதமர் பகிர்வு
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழில் எழுதியுள்ள கடிதத்தைப் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழில் எழுதியுள்ள கடிதத்தைப் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 24-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் வேளாண் துறை அமைச்சர் தோமர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளையும் தோமர் அளித்துள்ளார்.
தோமரின் இந்தக் கடிதத்தை அனைவரும் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சரின் கடிதம்: https://bit.ly/3pkM1Fh