குஜராத் கடற்பகுதியில் பாக். மீனவா் கைது
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக, குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவருடைய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக, குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவருடைய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத்தை ஒட்டியுள்ள சா் கிரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததை அவா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, அந்தப் படகை தடுத்து நிறுத்தி, அதில் வந்த மீனவரிடம் விசாரணை நடத்தியதில், அவா், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த காலித் ஹுசைன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்ததுடன், அவரது படகையும், அதில் கொண்டு வந்த 20 லிட்டா் டீசல், செல்லிடப்பேசி, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த நண்டு, மீன்கள் ஆகியவற்றையும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.