முகப்பு
இந்தியா

கரோனா: தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 592 பேருக்கு தொற்று 

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 592 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:


ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 592 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,73,013 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், நோய்த்தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,513 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிக்கு 6,888 பேர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று ஒரே நிலையில் 643 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை மொத்தம் 2,73,013 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →