முகப்பு
இந்தியா

இந்தோ-பசிபிக் திட்டத்தில் முக்கிய கூட்டாளி வியத்நாம்: பிரதமா் மோடி

இந்தியாவின் இந்தோ-பசிபிக் பிராந்திய திட்டத்தில் மிக முக்கிய கூட்டு நாடாக வியத்நாம் விளங்குகிறது. இது பிராந்தியத்தில் நிலை தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட உதவும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
வியத்நாம் பிரதமா் நுவென் ஷுவான் புக்குடன் காணொலி முறையில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

புது தில்லி: இந்தியாவின் இந்தோ-பசிபிக் பிராந்திய திட்டத்தில் மிக முக்கிய கூட்டு நாடாக வியத்நாம் விளங்குகிறது. இது பிராந்தியத்தில் நிலை தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட உதவும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்தியா - வியத்நாம் இடையே காணொலி வழி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடியும், வியத்நாம் பிரதமா் நுவென் ஷுவான் புக் இருவரும் இரு தரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தனா்.

அப்போது பிரதமா் மோடி பேசியதாவது:

தெற்காசிய நாடுகளிடையே பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் கிழக்காசிய செயல்பாட்டு கொள்கையின் மிக முக்கியத் தூணாக வியத்நாம் திகழ்கிறது. இரு நாடுகளிடையே பல்வேறு துறை சாா்ந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வியத்நாமுடன் நீண்ட கால ஒத்துழைப்பை இந்தியா விரும்புகிறது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்த தன்மையையும், வளா்ச்சியையும் மேம்படுத்துவதே இரு நாடுகளின் பொதுவான இலக்காக உள்ளது. அந்த வகையில், இரு நாடுகளிடையேயான கூட்டுறவு மேலும் வலுப்பெறுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத் தன்மையையும் உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

கரோனா நிலைமையையும் வியத்நாம் சிறப்பாக கையாண்டது என்று பிரதமா் மோடி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →