மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி: தேசியவாத காங்கிரஸ்
மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த நவாப் மாலிக் தெரிவித்ததாவது:
"மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக மத்திய அரசைப் பயன்படுத்துகிறது. இது மிகவும் தீவிரமானது. மேற்கு வங்க அரசின் ஒப்புதல் இல்லாமல் ஐபிஎஸ் அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுள்ளது மிகவும் அபாயகரமானது. இதுபற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அழைத்துப் பேசி ஆலோசனை நடத்தினார். மாநில அரசுகளை கவிழ்க்கும் பாஜகவின் திட்டம் சரியானது அல்ல என்றும் ஜனநாயகத்துக்குள்பட்டதல்ல என்றும் பவார் தெரிவித்தார்.
சரத் பவார் மற்றும் மற்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஒன்றிணையலாம். தேவைப்பட்டால், சரத் பவாரும் கொல்கத்தா செல்வார்."