நாட்டில் புதிதாக 24,337 பேருக்கு கரோனா பாதிப்பு
நாட்டில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,337 ஆக உள்ள நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 1,00,55,560 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,337 ஆக உள்ள நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 1,00,55,560 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 24,337 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,55,560-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 333 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,45,810-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 96,06,111-ஆக அதிகரித்தது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 95.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் இப்போது 3,03,639 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 20 லட்சம் போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் அதிகரித்தது. அதன்பிறகு, ஒரு கோடியைத் தொடுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.