முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துகள்: காங்கிரஸ்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த நாடு முழுவதும் சுமார் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழு டிசம்பர் 24-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கிறது. அப்போது குடியரசுத் தலைவரிடம் இவை சமர்ப்பிக்கப்படும்."

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவரம்:

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பிய முதலீட்டாளர்களிடம், விரும்பிய விலைக்கு விற்பனை செய்யும் வகையிலும், முதலீடுகளை ஈர்க்க வழி செய்யும் வகையிலும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

இந்த புதிய சட்டங்களால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய நடைமுறை ரத்து ஆவதாகவும், எனவே இந்த புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →