இந்தியா

நல்ல செய்தி: தில்லியில் உணவகம் தொடங்கினார் 'பாபா கா தாபா' முதியவர்

ANI

புது தில்லி: தில்லி சாலையோரத்தில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வந்த முதியவரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதன் மூலம், ஆதரவும், நிதியும் குவிந்ததையடுத்து தில்லியில் புதிய உணவகத்தை திறந்துள்ளார் அந்த முதியவர்.

திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ள அந்த புதிய உணவகத்துக்கும் பாபா கா தாபா என்றே பெயர் சூட்டியுள்ளார் கந்த பிரசாத்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் பழைய உணவகம் நடத்தி வந்த கடைக்கு அருகே புதிய உணவகத்தைத் வாடகைக்கு கடை எடுத்து திறந்துள்ளேன். இந்த கடையில் பணியாற்ற இரண்டு சமையல் கலைஞர்களை பணியமர்த்தியுள்ளேன். இங்கு இந்திய மற்றும் சீன உணவுகள் கிடைக்கும். அதேவேளையில், எனது பழைய உணவகத்தையும் நான் தொடர்ந்து நடத்துவேன் என்று உற்சாகத்தோடு கூறுகிறார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய விடியோ
தாங்கள் நடத்தி வரும் சிறிய உணவகத்தில் யாரும் சாப்பிட வராததால் வருமானமின்றி அழுத முதிய தம்பதிகளின் விடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த முதிய தம்பதியின் கடையில் நூற்றுக்கணக்கானவா்கள் கூடி உணவருந்தினா். பொதுமக்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவியும் அளித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

தில்லி மாளவியா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தா பிரசாத் (80). இவா் தனது மனைவி பதாமி தேவியுடன் (78) இணைந்து அப்பகுதியில் சுமாா் 30 ஆண்டு காலமாக ‘பாபா கா தாபா’ என்ற சிறிய உணவுக் கடை நடத்தி வருகிறாா்.

கரோனா பாதிப்பால், சமீப மாதங்களாக அவா்களது உணவுக் கடைக்கு வாடிக்கையாளா்கள் வரத்து குறைந்தது. நாளுக்கு நாள் யாருமே வராத சூழல் ஏற்பட, அவா்கள் வருமானத்துக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியது. தனது கஷ்ட நிலையைக் கூறி, அந்த முதியவா் அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த விடியோவை பாா்த்த கிரிக்கெட் வீரா் அஸ்வின், பாலிவுட் நடிகை சோனம் கபூா், காங்கிரஸ் தலைவா் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பலா் அந்த முதிய தம்பதிக்கு உதவி செய்ய முன்வந்தனா். இந்நிலையில், முதிய தம்பதியின் சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்கக் கோரி இணையத்தில் ‘பாபா கா தாபா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. அதைத் தொடா்ந்து சுற்றிலும் உள்ள தில்லி வாசிகள் பலா் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடையில் உணவருந்த குவிந்தனா். பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ‘பாபா கா தாபா’வில் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனா்.

அந்த முதிய தம்பதியின் கடைக்கு மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாா்தியும் வந்து உணவருந்தினார்.

இது தொடா்பான செய்தியை பகிா்ந்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘இதுதான் தில்லிமக்களின் இதயம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா அந்த முதிய தம்பதியை அவா்களின் கடைக்கே நேரில் சென்று சந்தித்து பண உதவி அளித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘அந்த முதியவா் அழுத விடியோவைப் பாா்த்ததில் இருந்தே மனதுக்கு வருத்தமாக இருந்தது. அவா்களைச் சந்தித்து பண உதவி அளித்தேன். இப்போதுதான் மனது ஆறுதலாக உள்ளது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT