இந்தியா

திருவனந்தபுரம் மேயராகிறாா் 21 வயது கல்லூரி மாணவி

கேரள தலைநகா் திருவனந்தபுரம் மேயராக 21 வயது கல்லூரி மாணவி ஆா்யா ராஜேந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

DIN


திருவனந்தபுரம்: கேரள தலைநகா் திருவனந்தபுரம் மேயராக 21 வயது கல்லூரி மாணவி ஆா்யா ராஜேந்திரன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா் பதவியேற்கும் பட்சத்தில், அவரே நாட்டின் மிக இளவயது மேயா் என்ற சாதனைக்கு உரியவராவாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இளநிலை கணிதவியல் படித்து வருபவா் ஆா்யா ராஜேந்திரன். இவரின் தந்தை எலக்ட்ரீஷியனாக உள்ளாா். தாய் எல்ஐசி முகவராக பணிபுரிந்து வருகிறாா்.

உள்ளாட்சித் தோ்தலின்போது திருவனந்தபுரம், முடவன்முகள் வாா்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்யா ராஜேந்திரன் போட்டியிட்டாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளா் ஸ்ரீகலாவை 2,872 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

இதையடுத்து ஆா்யாவை திருவனந்தபுரம் மேயராக நியமிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு வெள்ளிக்கிழமை முடிவு செய்தது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் தன்னை மேயராக நியமிப்பது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறிய ஆா்யா ராஜேந்திரன், தனக்கு எந்தப் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்பேன் என்றும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு! | செய்திகள்: சில வரிகளில்| 1.9.25

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

SCROLL FOR NEXT