முகப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிச.31-இல் கூடுகிறது கேரள சட்டப்பேரவை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்டக் கோரிய கேரள அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிச.31-இல் கூடுகிறது கேரள சட்டப்பேரவை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்டக் கோரிய கேரள அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
கேரள முதல்வர் பினராயி விஜயன்
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்டக் கோரிய கேரள அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 29 நாள்களாக தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் ஆதரவளித்து வரும் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது மாநில சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி சிறப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யவும் அமைச்சரவை திட்டமிட்டது.

"தேசிய அளவில் விவசாயிகள் கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். கேரளம் ஒரு நுகர்வோர் மாநிலம் என்பதால் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட வேண்டும்" என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு அனுப்பப்பட்ட அமைச்சரவையின் பரிந்துரைக்கு அவர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

முன்னதாக கேரளத்தில் ஆளும் இடது முன்னணி அரசின் சார்பில் வேளாண் சட்டங்களைக் குறித்து விவாதிப்பதற்காக டிசம்பர் 23ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட அனுமதி கோரிய முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →