மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,018 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,108 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,108 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,25,066 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,20,021 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Advertisement
மேலும் 68 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 49,373 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 54,537 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 94.54 சதவிகிதமாக உள்ளது.