முகப்பு
கிரிக்கெட்

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடியான பேட்டிங் குறித்து...

Updated On : 8 ஏப்ரல் 2026, 9:22 pm IST
பட்லர், கில், வாஷிங்டன் சுந்தர். - படங்கள்: குஜராத் டைட்டன்ஸ்.
பகிர்:

ஐபிஎல் 2026 தொடரின் 14ஆவது லீக் போட்டியில் தில்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 210/4 ரன்கள் குவித்தது.

இந்த ஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர், பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தில்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2, குல்தீப், லுங்கி இங்கிடி தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றிக்கான முனைப்பில் நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது. தில்லி தனது ஆதிக்கத்தை நிரூபிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

summary

Three Half-Centuries: Gujarat Sets 211-Run Target for Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.