இந்தியா

முன்னாள் முதல்வரின் மனைவி கரோனா தொற்றால் மரணம்

DIN

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சாந்த குமாரின்  மனைவி கரோனா தொற்றால் செவ்வாயன்று மரணமடைந்தார்.

பாஜகவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சாந்தகுமார் கடந்த 1977 மற்றும் 1990 ஆகிய இருமுறை அம்மாநில முதல்வராகப் பணியாற்றியவர். அவரது மனைவி சந்தோஷ் சைலஜா (83). இவர்கள் இருவருக்கும் கடந்த 27-ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கங்ரா மாவட்டம் தண்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அவர்களது ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் செவ்வாயன்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT