மேற்கு வங்கத்தில் ஜன. 15-ல் இறுதி வாக்காளர் பட்டியல்
மேற்கு வங்கத்தில் ஜனவரி 15-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஜனவரி 15-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதால், வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி 15-ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஆரிஸ் அஃதாப் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக வடக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் பணிகள் ஏற்பாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.