கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் இலங்கை தமிழர் இயக்கிய புதிய படம்!
கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் குறித்து...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி கூட்டணியில் நீளிரா என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்காக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனமும் முதல்ம்யுறையாக ஒன்றாக இணைகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தை 2015ல் தொடங்கினார். இந்தத் தயாரிப்பில் பத்துக்கும் மேல்பட்ட படங்கள் உருவாகியுள்ளன.
நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் 2005ல் உருவாக்கப்பட்டது. இதில் 70-க்கும் மேல்பட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
இலங்கைத் தமிழர் சோமிதரண் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவீன் சந்திரா, விது முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஏப்.3ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.