இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒருதலைக் காதல் விபரீதம்: தீ வைக்கப்பட்ட பேராசிரியை மரணம்

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் வர்தா பகுதியில், 25 வயது கல்லூரி பேராசிரியை அங்கிதா மீது தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

ஒருதலைக் காதலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பெண்ணைக் காதலிக்குமாறு துன்புறுத்தி வந்த குற்றவாளி விக்கி நக்ரலே, கடந்த திங்கட்கிழமை, அங்கிதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், 40% காயங்களுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திங்கட்கிழமை காலை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது நேரிட்ட இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அங்கிதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

இன்று காலை 6.55 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகம் மற்றும் தலைப் பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

காதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்ட பெண் மரணம் அடைந்ததை அடுத்து, குற்றவாளியின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் சூறையாடப்பட்டன. குற்றவாளி விக்கி நக்ரலேவுக்கு திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT