முகப்பு
இந்தியா

தில்லி பேரவைத் தேர்தல்: நோட்டாவிடம் தோல்வியைத் தழுவிய மாநிலக் கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இதர மாநிலக் கட்சிகளுக்கு தேர்தலில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இதர மாநிலக் கட்சிகளுக்கு தேர்தலில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 10 மாநிலக் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், ஒரு கட்சிக் கூட பதிவான வாக்குகளில் 1 சதவீத வாக்கினைப் பெறவில்லை.

லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 10 கட்சிகளில், இரண்டு கட்சிகள் மட்டுமே நோட்டாவை விட கூடுதலாக வாக்குகளைப் பெற்றிருந்தன. மற்றபடி 8 மாநிலக் கட்சிகளும் நோட்டாவை விடக் குறைவான வாக்குகளையே பெற்றன.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியே ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான். காங்கிரஸ் கட்சிக் கூட ஒற்றை இலக்கத்தில்தான் வாக்கு சதவீதத்தைப் பிடித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.