முகப்பு
இந்தியா

பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி

தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:52 PM
பகிர்:


சண்டிகர்: தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் லாங்கோவால் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வேனில் 12 மாணவர்கள் இருந்தனர்.

வேனில் தீப்பிடித்ததும், ஓட்டுநர் தப்பியோடினார். பொதுமக்கள், வேனில் இருந்த 8 சிறுவர்களை மீட்டனர். ஆனால், 4 முதல் 6 வயதுடைய நான்கு சிறுவர்கள் தீவிபத்தில் சிக்கி பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.