இந்தியா

மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து

DIN

மும்பை பைகுல்லா பகுதியில் மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்பது தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 8வது தளத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ பற்றியது. தொடர்ந்து, 9வது தளத்திற்கும் தீ பரவியது. 

தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 16 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து, உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் இல்லை. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT