முகப்பு
இந்தியா

மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து

மும்பை பைகுல்லா பகுதியில் மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:53 PM
பகிர்:

மும்பை பைகுல்லா பகுதியில் மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்பது தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 8வது தளத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ பற்றியது. தொடர்ந்து, 9வது தளத்திற்கும் தீ பரவியது. 

தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 16 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து, உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் இல்லை. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →