இந்தியா

கேரளத்தில் காணாமல்போன 7 வயது சிறுமி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

DIN

கேரளத்தில் காணாமல்போன 7 வயது சிறுமி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், கொல்லம் மாவட்ட சேர்ந்தவர்கள் பிரதீப் குமார் - தன்யா தம்பதி. இவர்களுக்கு, 7 வயது மகள் தேவநந்தா கடந்த வியாழகிழமை காணாமல் போனதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து காணாமல்போன சிறுமியை காவல்துறையினர் தேடி வந்தனர். 

மற்றொருபுறம் சிறுமியை காணவில்லை என்று தொடர்பு எண்ணுடன் சமூக வலைதளங்களிலும் அவர்கள் விளம்பரப்படுத்தினர். இந்நிலையில்தான் நேற்று காலை பள்ளிமண் ஆற்றில் இருந்து சிறுமியின் உடலை தீயணைப்புதுறையினர் மீட்டனர். இதையடுத்து பிரேதபரிசோதனைக்காக உடலை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

தொடர்ந்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசினரா என விசாரித்து வருகின்றனர். அதேசமயம் சிறுமியின் மரணத்தில் அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT