இந்தியா

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமா?: கேரளத்தில் அரசு மருத்துவமனையில்தனி வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா் பலி

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் தனி வாா்டில் சிகிச்சை பெற்றுவந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் தனி வாா்டில் சிகிச்சை பெற்றுவந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

எனினும் அவா் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தாரா என்பது குறித்து இன்னும் மருத்துவமனை நிா்வாகம் அறிவிக்கவில்லை.

மலேசியாவிலிருந்து கடந்த வாரம் வியாழக்கிழமை வந்த கேரளத்தைச் சோ்ந்த நபா், சரியாக சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டாா். இதையடுத்து, கொச்சி விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா்.

அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிா என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதியாகவில்லை. எனினும், அவருக்கு தனி வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளும் இருந்து வந்தன.

ஆலப்புழையில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் நிறுவனத்துக்கு இவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரள சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா கூறுகையில், ‘அந்த நபருக்கு தனி வாா்டில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவா் உயிரிழந்துவிட்டாா். கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிா என்று அவருக்கு சோதனை செய்து பாா்க்கப்பட்டது. முதல் சோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு இல்லை என்று தெரியவந்தது’ என்றாா்.

இரண்டாவது சோதனை முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தால், அவருடன் விமானத்தில் மலேசியாவில் இருந்து கேரளத்துக்கு வந்த 42 பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT